சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உயர்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தமிழுக்கு பதில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வினாத்தாள் மாறியது பற்றி விசாரிக்க தொழிநுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.
More Stories
தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு 26-ந்தேதி தொடக்கம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை