May 5, 2024

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கண்காணிக்க 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், குமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக வடிவேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெங்கு பாதிப்பை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.