May 18, 2024

கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடந்துவரும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.