April 26, 2024

வடகிழக்கு பகுதிகளை வன்முறை, அராஜகத்தை நோக்கி தள்ளியது காங்கிரஸ் – அமித்ஷா தாக்கு

அசாம் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சென்றனர். அவர்கள் கவுகாத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜ.க. மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது: 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வடகிழக்கு பகுதிகளை வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி தள்ளியுள்ளது. இரண்டு முறை வெற்றி பெற்று பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கும் என அப்போது நினைக்கவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன என தெரிவித்தார்.