April 30, 2024

எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண உதவி.

[responsivevoice_button voice=”Tamil Male”]குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட 85,000 குடும்பங்களுக்கு 401 டன் அரிசி முன்னாள் அமைச்சரும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான *கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண உதவிகள்.

ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பு இழந்து வருவாய் இன்றி தவித்து வந்த பல்வேறு தரப்பினருக்குமாண்புமிகு *கழகதலைவர்அவர்களின் அறிவுறுத்தல்படிகடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கி வந்த நிலையில் இன்று கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் குறிஞ்சிப்பாடிசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் சுமார் 401 டன் அரிசியை இன்று வழங்கினார். தனியார் குறிஞ்சிப்பாடிபத்மாவதிதிருமண மண்டபத்தில் கழக நிர்வாகிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து 5 கிலோ கொண்ட அரிசி பைகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்ட திரு. எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்அவர்கள் கழக நிர்வாகியிடம் தனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குடும்பத்தார்களுக்கும் முறையாக இந்த நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை பார்வையிட்டு பகுதி வாரியாக வாகனங்களை பிரித்து கழக நிர்வாகியிடம் ஒப்படைத்து பொதுமக்களுக்கு வீடு வீடாக நேரில் சென்று வழங்குமாறு அறிவுறுத்தினார்.[/responsivevoice]