April 26, 2024

முற்பிறவி பாவங்களை போக்கும் திருபுவனம் ரெங்கநாதர் திருக்கோவில்

ரெங்கநாதர் என்றால் நம் நினைவுக்கு திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் தான் நினைவுக்கு வரும். வைணவ திருத்தலங்களில் முக்கிய இ்டம் வகிக்கும் ஸ்ரீரங்கத்தை போல தஞ்சை மாவட்டத்தில் சின்ன ஸ்ரீரெங்கம் என்று அழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் சின்னஸ்ரீரெங்கம் என அழைக்கப்படும் ரெங்கநாதர் கோவில் உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்று வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

திருபுவனம் ரெங்கநாதர் கோவில் சுமார் 1200 ஆண்டுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது ஆகும். திருப்பணிகள் மேலும் சோழ பேரரசன் ராஜராஜன் தனது சகோதரிக்கு வழங்கிய 7 நாடுகளில் நடுநாயகமாக இந்த ஊர்(திருபுவனம்) இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏரி வெட்டப்பட்டு இந்த ஆலயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வூர் பாண்டிய மன்னர்களின் வசமானது. 1350- ம் ஆண்டு இந்த கோவிலில் கருங்கல்லால் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறகு இந்த கோவில் படையெடுப்புகளால் சிதைவுக்கு உள்ளானது.

சாமி சிலைகள் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 1958-ம் ஆண்டு கரந்தை தமிழ்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் என்ற நூலில் இக்கோவில் பற்றி வித்வான் கோவிந்தராஜன் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக 1960-ம் ஆண்டு மே மாதம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சரஸ்வதி மஹால் தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் நாகசாமி ஆகியோர் ரெங்கநாத பெருமாள் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அங்கு தொல்லியல் ஆய்வு மேற்கொண்டபோது 9 அடி அளவில் சயன கோலத்தில் பெருமாள், 4 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் சீனிவாச பெருமாள் சிலை, 2½ அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், ராமபிரான், சீதாபிராட்டியார் திருமேனிகளும், ராமானுஜர், திருமங்கையாழ்வார், கூரத்தாழ்வார், திருமேனிகளும், சக்கரத்தாழ்வார் பீடமும், விஷ்வக்சேனர் திருமேனியும் கண்டெடுக்கப்பட்டன.

ஐம்பொன்சிலைகள் கடந்த 2013- ம் ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவில் திருப்பணி தொடங்கப்பட்டது. அப்போது அடித்தளம் தோண்டியபோது பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மூலவர் சிலை மற்றும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஐம்பொன் சிலைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மற்ற விக்ரகங்கள் அனைத்தும் தற்போது ஒரு தகர கொட்டகை அமைக்கப்பட்டு அதில் பிதிஷ்டை செய்யப்பட்டு இன்று வரை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். முற்பிறவி பாவங்கள் தூணில் இருந்தாலும் துரும்பில் இருந்தாலும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் ரெங்கநாதப்பெருமாள் திருபுவனத்தில் அமர்ந்து எட்டு திசையிலும் இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். மேலும் திருமண தடை நீங்கவும், மனகசப்பினால் பிரிந்த தம்பதியர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். முந்தைய பிறவியில் தாங்களோ அல்லது தங்கள் மூதாதையர் செய்த பாவத்தால் துன்பப்படும் பக்தர்கள் திருபுவனம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வை பெறலாம் என கூறப்படுகிறது.

கோவில் குளம் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தினசரி காலையும், மாலையும் பாடல்கள் பாடி வழிபட்டு செல்கிறரா்கள். திருபுவனம் ரெங்கநாதப்பெருமாள் கோவில் தல விருட்சமாக நாகமரம் உள்ளது. இங்கு தீர்த்தமாக பிராமணர் குளம், தேவர் அடியரா் குளம் ஆகிய 2 குளங்கள் உள்ளன. இந்த கோவிலில் கடந்த 1957-ம் ஆண்டுக்கு பின் குடமுழுக்கு நடைபெறவில்லை. வைகுண்ட ஏகாதசி அன்று 3 நாட்கள் விழா நடக்கும். மற்றும் அனைத்து ஏகாதசி நாளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகைக்கு மறுநாள் பெருமாள் கார்த்திகை என சிறப்பு பூஜை நடக்கும். அஷ்டமி, திருவோணம் நாட்களில் விஷேச பூஜைகள் நடைபெறும். காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலையில் 4 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் இந்த கோவில் நடை திறந்திருக்கும். புதுப்பிக்க கோரிக்கை திருபுவனம் ரெங்கநாதர் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு அடித்தளம் போட்ட நிலையிலேயே உள்ளன. வரலாறு பேசும் இந்த கோவில் திருப்பணி முடிய அரசு தேவையான நிதிஉதவி வழங்கினால் மட்டுமே நிறைவு பெறும்.

கோவிலுக்கு செல்வது எப்படி? திருபுவனம் ரெங்கநாதர் கோவில் தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சாலியமங்கலம் அருகே வலது புறத்தில் ஒரத்தநாடு செல்லும் வழித்தடத்தில் உள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து அம்மாப்பேட்டை, நீடாமங்கலம் செல்லும் பஸ்களில் சென்று சாலியமங்கலத்தை அடைந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருபுவனம் ரெங்கநாதர் கோவிலை அடையலாம்.