April 26, 2024

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவியை பெற்றவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார்கள்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையுமின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.

கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் பொதுத்தேர்வு நடைபெறும்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை பெற்றவர்கள் மீது தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.