April 25, 2024

தி.மு.க.வை மிஞ்சிய பா.ம.க

[responsivevoice_button voice=”Tamil Male”]அரசியல் கட்சிகள், தங்களுக்கு கிடைக்கும் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் சமர்பிக்க வேண்டும். தேசிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் நன்கொடைகளை அளித்து ரசீது வாங்கி விட்டன.

நாட்டில் உள்ள 25 பிராந்திய கட்சிகள் 2018 -19 ஆம் ஆண்டில் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை இப்போது தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளன. கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் ஆண்டு என்பதால் கட்சிகளுக்கு தாராளமாகவே நன்கொடைகள் குவிந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அதிகம் நன்கொடை வாங்கி இருப்பது, பா.ம.க. தான். அந்த கட்சிக்கு 4 கோடியே 19 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 3 கோடியே 5 லட்சம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது.தே.மு.தி.க. பெற்ற நன்கொடை 6 லட்சம் ரூபாய்.அ.தி.மு.க. தான் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இதுவரை வழங்கவில்லை. தி.மு.க.வில் இருந்தபோது ’’கணக்கு எங்கே?’’ என்று கேட்டு கலகம் செய்து, தனிக்கட்சி ஆரம்பித்தவரின் கட்சி, இதுவரை தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டாமல் இருப்பது விநோதம். சட்டவிதிகளையே கடைப்பிடித்தனர். படித்து மனனம் செய்த ஸ்மிருதிகள் என்னும் நீதி நூல்களை அறிந்த அந்தணர் சட்ட விதிகள் சரிவர நடக்கத் துணைபுரிந்தனர்.

அங்கே அடிமைகளையும் காணவில்லை. அங்குள்ள மக்களை விசாரித்தபோது அடிமை வழக்கமே அங்கு இல்லை என்றும், ஓர் எஜமான் எதிரில் வேலையாள் குழைந்து வாழ்வதோ, அடிமையை எஜமான் மிரட்டுவதோ மேன்மை ஆகாது என்றும் சொன்னார்கள். இடுகாடுகளில் அமைத்த கல்லறைகள் ஆடம்பரமின்றி இருந்தன. பல ஜாதியார், பிணங்களைக் கொளுத்தி வந்தார்கள் என்றும், அந்த இடத்தில் எந்தவிதமான நினைவுச் சின்னமும் எழுப்புவதில்லை என்றும் தெரிந்தது. மக்கள் தாம் உயிரோடு இருக்கும் போது செய்த நற்செயல்களே, தாம் இறந்தபின் தங்களைப்பற்றி நினைவூட்டும் என்று கருதினார்கள். அந்த மக்களின் முக்கியமான உணவு அரிசியும் கறிகாய்களுந்தாம். தாழ்ந்த வகுப்பார் அரிசியிலிருந்து இறக்கிய ஒருவகைச் சாராயத்தைக் குடித்தார்கள். உயர்குலத்தார் அப்படிக் குடிப்பதில்லை. சித்தார்த்தகன் மெகஸ்தனீசிடம் ‘யாகயக்ஞங்கள் நடத்தும் போது தான் உயர்குலத்தார் மதுவை அருந்துவார்கள்” என்றான். மெகஸ்தனீசுக்கு இதைக் கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. அங்கேயுள்ள மக்கள் தங்களுக்குப் பிடித்த சமயத்தில் தனித்தனியே உண்ணும் வழக்கத்தைக் கண்டு, “இதென்ன, விநோதமாக இருக்கிறதே! குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் இருந்து சேர்ந்து உண்ணுவதுதானே நல்லது அப்போதுதானே சமூக வாழ்வும் முன்னேறும்“ என்று மெகஸ்தனீஸ் சித்தார்த்தகனைக் கேட்டான்.

சித்தார்த்தகன், “அப்படிச் செய்டவது குடிகளுடைய சுதந்தரத்தைக் கட்டுப்படுத்துவதாகும். எங்கள் சட்ட விதிகளுக்கே புறம்பானது. அப்படிச் செய்தால் மக்களெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளம்பி விடுவார்கள்” என்றான். பாடலிபுத்திரத்தை அடைந்ததும் அரசாங்க விருந்தினர் தங்கும் மாளிகையில் மெகஸ்தனீசை அமர்த்தி, எல்லாவித வசதிகளும் செய்து கொடுத்தான் சித்தார்த்தகன் – தொடரும்