உத்தர பிரதேசம் முதல் கோவா வரையிலான 5 மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளிலும், பஞ்சாபில் 18 தொகுதிகளிலும், உத்தர காண்டில் 18 தொகுதிகளிலும், கோவாவில் 12 தொகுதிகளிலும், மணிப்பூரில் 4 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:-
மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றிப் பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அவர்களின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் எனது நன்றிகள். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி