சிவனின் ரூபமான பைரவரை வழிபட்டால் நீங்கும் தோஷம் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்வதால் கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்து காணலாம்.
பைரவருக்கு பூஜைகள் செய்வதால் நிவர்த்தியாகும் தோஷங்கள்
பைரவரின் திருவுருவத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு ராசி என பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. அவரின் தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
More Stories
வாழ்வில் நல்லதொரு மாற்றங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம்
பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தம்..!
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது