அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார். தேர்தலில் 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை 1,14,205. வி.வி.பேட் இயந்திரங்களின் எண்ணிக்கை 1,20,807. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கிவிட்டதாக சாகு பேட்டியளித்துள்ளார். அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு புகைப்படம் இல்லாமல் பூத் சிலிப் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More Stories
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
வருவாய் பற்றாக்குறையில் இரண்டாமிடம்:
உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின்தங்கிய தமிழ்நாடு,
நிர்வாகம் தெரியாத திமுக அரசு!-
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்