லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வி குறித்து இன்று பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, கட்சியின் தோல்விக்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி மற்றும் சில ஊடகங்கள் மீது குற்றம்சாட்டினார்.
பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் ‘பி டீம்’ என தேர்தலில் மக்களை தவறாக வழிநடத்திவிட்டதாக பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் பிடீம் அல்ல என்றும் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நாங்கள் மாறுபட்டவர்கள் என்றும் கூறினார். தேர்தல் தோல்வியால் சுணங்கிவிடமாட்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
‘பகுஜன் சமாஜ் கட்சியை பாஜகவின் பி டீம் எனக் காட்டும் ஊடகங்களின் ஆக்ரோஷமான பிரச்சாரம்தான் முஸ்லிம் மக்களையும் பாஜக எதிர்ப்பு வாக்காளர்களையும் மாற்றியது.
முஸ்லிம் மக்களின் இந்த முடிவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் உத்தரபிரதேசத்தில் ‘காட்டு தர்பார்’ திரும்பும் என உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர சமூகத்தில் உள்ள எங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதனால்தான் இந்த சமூகத்தினர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இதுதவிர சமாஜ்வாடி கட்சி போல பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் வலுவாக போட்டியிடவில்லை என்ற கருத்தும் பரப்பப்பட்டது.’ என்றார் மாயாவதி.

More Stories
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை: உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
தேர்வை வெல்வோம்..! வாழ்வில் உயர்வோம்..!
மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள்..!
அமைச்சர் சிவசங்கர்
சத்தம் இல்லாமல் சாதனை…!