கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒரு விழாவில் திரைப்பட நடிகர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த் பங்கேற்று பேசும் பொழுது மேடையில் அமர்ந்து இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் புன்னகையோடு சிரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேசிய ரஜினிகாந்த் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான மூத்த தலைவர் துரைமுருகன் அவர்களை விமர்சித்து பேசினார். பிறகு அது சர்ச்சை ஆகி ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகனை தொடர்பு கொண்டு தொலைபேசியில் வருத்தம் தெரிவித்ததோடு நேரில் பத்திரிகையாளர்களை சந்தித்தப் போதும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். பிரச்சனை அதோடு முடிவுக்கு வந்தது.
அதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியை தானாக முன்வந்து விலகிவிடுவார் என்ற நோக்கத்தில் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் பத்திரிகை செய்திகள் மூலம் அமைச்சருக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு வயதை சுட்டிக்காட்டி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற அர்த்தத்தில் எண்ணற்ற கட்டுக்கதைகளை தொடர்ந்து கசியவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யார் மூலக் காரணம் என்பதை திமுக தொண்டர்களும் மாற்றுக் கட்சியினர்களும் புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
அதே வேளையில் ஒரு பெரும்பான்மை சமுதாயத்தில் இருந்து நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் எத்தனையோ ஆசை வார்த்தைகளுக்கு ஆட்படாமல் திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இன்று வரை தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து வரும் அமைச்சர் துரைமுருகன் அதிமுகவின் நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அழைத்தப் போது கூட எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் எம்.ஜி.ஆரின் கவர்ச்சிக்கும் ஆட்படாமல் திமுகவும், கலைஞ்ரும் எனது தலைவர் என்று உறுதியாக நின்றவர் துரைமுருகன் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு தெரிந்த விஷயம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் திமுக தலைவர்கள் ஏற்பாடுகள் செய்யும் நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு எந்தவித முக்கியத்துவம் தராமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை தவிர்ப்பதும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பொதுச்செயலாளராக மறைந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இருக்கும் வரை அவருக்கு வழங்கிய மதிப்பும் மரியாதையும், இன்றைய பொதுச்செயலாளரான துரைமுருகன் அவர்களுக்கு வழங்குவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி வன்னியர்கள் மத்தியிலும் திமுகவினர் மத்தியிலும் கேள்வியாக எழுகிறது.
ஒரு காலத்தில் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார். அதே போன்ற ஒரு நிலை அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்படுமேயானால் வடமாவட்டங்களில் உள்ள திமுகவின் வாக்கு வங்கி எத்தகைய சரிவை சந்திக்க நேரிடும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
கனிமவளத்துறை எடுக்கப்பட்ட விதமும் சட்டத்துறையை வழங்கி நீதிமன்றம் நீங்கலாக இலாக்கா ஒதுக்கீடு செய்திருப்பது மேலும் ஒரு பின்னடைவாக அமைச்சர் துரைமுருகன் கருதவில்லையென்றாலும் பெரும்தன்மையோடு தான் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்த்து வருகிறார். எட்டு மண்டலங்களாக பிரித்து கட்சிப் பணிகளை முடுக்கி விடுவதற்கு திட்டமிடும் போது வன்னியர் பகுதிகள் எல்லாம் அரசியல் அதிகாரம் செலுத்துவதற்கு கட்சியின் முடிவுகளை எடுப்பதற்கும் அமைச்சர் ஏ.வா.வேலுவை நியமித்து சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் கணக்குப் போட்டு செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல ஆண்டுகாலமாக திமுகவின் நம்பிக்கைக்குரிய விசுவாசிகளாகவும், தளபதிகளாகவும், மாவட்ட செயலாளர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்து வரும் வன்னியர் மீது நம்பிக்கை குறைந்ததற்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை நினைத்துப் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.
பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திமுகழகத்திற்கு வாக்-கு வங்கியாகவே இருப்பார். பதவி சுகத்துக்காக இருக்க மாட்டார். யார் யாருக்கு கட்டம் கட்டுவதற்கு இத்தகைய செய்திகள் எங்கிருந்து கசியவிடப்படுகிறது-. குழப்பத்தில் தொண்டர்கள்.
– டெல்லிகுருஜி
More Stories
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி
இந்தி எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல… அமித் ஷா பேச்சு