2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டுக்கான துறைத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதி விவரம் வருமாறு:-
17-ந்தேதி- (திருவள்ளூர், காஞ்சிபுரம்) – திருவள்ளூர் மையம்
26 மற்றும் 27-ந்தேதி- (சென்னை, டெல்லி) – சென்னை
இதுகுறித்து நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான குறிப்பாணை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி