3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தமிழக அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தீர்மானத்தில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது:
- 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை.
- மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை.
- வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
- மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளன.
- சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை.
- மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும்.
- மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
தமிழகமெங்கும் 3 நாட்களுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்! திமுக அறிவிப்பு!
போர்பந்தர் அருகே ரூ.2000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இந்திய கடற்படை அதிரடி
தமிழ்தேசம் – வன்னிய தேசம்
மகரம்