April 25, 2024

எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறி வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரனா காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி தொண்டர்களை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு கடும் முயற்சி செய்து வருகிறார். இதற்காக கட்சி நிர்வாகிகள் மூலமாக ஆதர செய்யுமாறு ஆங்காங்கே தனது ஆதரவாளர்கள் மூலம் கடும் முயற்சி செய்து வருகிறார். இதற்காக கொரனா தடை காலத்திலும் தொடர்ந்து மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு குறைந்தப்பட்சம் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு ஆங்காங்கே வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று உத்தரவு இட்டு அந்த பணியினையும் முடுக்கி விட்டுள்ளார். ஒ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் பிரச்னையை எழுப்புவதால் சுதாகரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விரைந்து செயல்படுகிறார்.

முதலமைச்சர் பதவியும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தானே தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று அதற்கான ஏற்பாட்டினை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறார். ஒருவேளை சசிகலாவின் ஆதரவு இவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அணி திரள்வார்கள் என்று நம்புகிறார்களாம்.