இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா சிறப்பாக ஆடி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜோ ரூட் சதமடிக்க 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து 432 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி
இதையடுத்து, இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. அணியின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்போது கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 91 ரன்னுடனும், விராட் கோலி 45 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஓவர்டோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
More Stories
சென்னையில் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!!
ஆசிய விளையாட்டு போட்டி – மேலும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி- 27 பதக்கங்களுடன் 3ம் இடம் பிடித்தது இந்தியா